செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் மாணவி சாவு

கடலூர்: கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் விஜயதர்ஷினி (17). இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். விஜயதர்ஷினி அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை தமிழரசன் கண்டித்துள்ளார். மனமடைந்த விஜயதர்ஷினி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று புடவையால் தூக்கு போட்டு கொண்டார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.