தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (டிசம்பர் 2ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் உயா்அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக சத்தியநேசம் தெரு, ஜோஸ்வாதெரு, கிரெளன்தெரு, ஈஸ்ட் ஆப்தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது
திருப்பூர்
குமார்நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குமாரனந்தபுரம் மின்பாதையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
அனுப்பங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சென்னை
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கிண்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
ராஜ்பவன் டி.என்.எச்.பி.பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காமராஜர் தெரு, பரங்கிமலை மவுண்ட் பூந்தமல்லி ஒரு பகுதி, ராணுவ காலனி, சுந்தர் நகர் முகலிவாக்கம் டி.வி.நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு நந்தம்பாக்கம் கோலபாக்கம் கிராமம், பிரதீப் மருத்துவமனை ஆலந்தூர் எம்.கே.என்.ரோடு, தர்மராஜா கோயில் தெரு மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், சங்கர்தாஸ் தெரு நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர், ராமசந்திரா நகர், காமாட்சி நகர் டி.ஜி.நகர் தில்லை கங்கா தெரு, நங்கநல்லூர் புழுதிவாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு, எஸ்.ஐ.பி.காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.