"எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்!"- காதலனுடன் புகைப்படம் பகிர்ந்த பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்த பிரியா பவானி சங்கர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மாஃபியா’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  மேலும் ‘இந்தியன் 2’ ‘பொம்மை’, ‘அகிலன்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’, ‘டிமான்ட்டி காலனி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவின.

இந்த நிலையில் தனது காதலரை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியிருந்தார் பிரியா பவானி சங்கர். தற்போது தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், “18 வயது இருக்கும் பொழுது நாங்கள் கடற்கரைக்குச் சென்று, சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் எங்களின் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். தற்போது அந்தக் கனவின்படி, நாங்கள் எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரியா பவானி சங்கரின் இந்தப் பதிவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.