மும்பை, :மும்பையில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை, சக மாணவர்கள் இருவர் வகுப்பறையில் கூட்டு பலாத்காரம் செய்ததையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பையில், மாதுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது.
இதில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர் நடனப்பயிற்சிக்காக வெளியே சென்ற நிலையில், ஒரு மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது உடன் படிக்கும் இரண்டு மாணவர்கள், அந்த மாணவியை வகுப்றையில் வைத்தே கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதில் அதிர்ச்சிக்குள்ளான சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்த விஷயத்தை தெரிவித்தார்.
அவர்கள் அளித்த புகாரின்படி விசாரணை செய்த போலீசார், மாணவர்கள் மீது ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement