ரூ.1 வரதட்சணை பெற்ற உத்தர பிரதேச இளைஞர்| Dinamalar

முசாபர்நகர்,உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மணமேடையிலேயே வரதட்சணை பணம் மற்றும் தங்க நகைகளை மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, சடங்குக்காக 1 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.

உத்தர பிரதேசத்தின் திடாவி அருகே லகான் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரவ் சவுகான். வருவாய்த் துறை அதிகாரியான இவருக்கும், ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

மணமகனுக்கு ரொக்கமாக 11 லட்சம் ரூபாய் மற்றும் மணமகன், மணமகள் இருவருக்கும் தங்க நகைகள் ஆகியவற்றை ராணுவ வீரர்வழங்கியிருந்தார்.

திருமணம் முடிந்தவுடன், மணமேடையிலேயே பணம் மற்றும் நகைகளை மாமனாரிடம் திருப்பிக் கொடுத்த சவுரவ், சடங்குக்காக அவரிடம் இருந்து 1 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார். சவுரவின் இந்தச் செயலை திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.