குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து, 2ஆம் கட்டமாக, அகமதாபாத், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதலமைச்சர் பூபேந்திர படேல், ஹர்திக் படேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.
இந்த தேர்தலில் குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஏற்கனவே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பலத்துடன் பாஜக உள்ளது. எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்புக்காட்டி வரும் நிலையில், ஆம் ஆத்மி வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in