குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பாஜக – கருத்துக்கணிப்பு!!

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி 128 முதல் 148 இடங்களை கைப்பற்றும் என ரிபப்ளிக் சேனலின் தேர்தலுக்கு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மிக்கு இரண்டு முதல் 10 இடங்களும் கிடைக்கும் என ரிபப்ளிக் கணித்துள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாரதிய ஜனதாவிற்கு 131 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களும், ஆம் ஆத்மிக்கு ஆறு இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சி-வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதாவிற்கு 128 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 31 முதல் 43 இடங்களும், ஆம் ஆத்மிக்கு மூன்று முதல் 11 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, பாரதிய ஜனதா 117 முதல் 140 இடங்களையும், காங்கிரஸ் 34 முதல் 51 இடங்களையும், ஆம் ஆத்மி ஐந்து முதல் 13 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.