மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா என்பது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அதில், மத்திய அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். அதுபோன்று, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கும் திட்டமும் இல்லை என்றார். தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி வழி கல்வியை ஊக்குவிப்பதாக இணை அமைச்சர் கூறியுள்ளார்.
newstm.in