சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி!..திருமணத்தின் போது சோகம்..

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர்கள் வெடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

ஜோத்பூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிவிபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. சிலிண்டர் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.