தேசியக் கட்சியாக மாறிய ஆம் ஆத்மி

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (டிச. 8) காலை முதல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி பாஜக 158 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய தேர்தல் மூலமாக ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக வலுப்பெற்றுள்ளதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேசியக் கட்சி. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. தேசிய கட்சியாக குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி.

குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 39,00,000 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.