காஷ்மீரில் கிலானி வீட்டுக்கு சீல்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், பிரிவினை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு சொந்தமான சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. புல்வாமா, குல்காம், பத்காம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மறைந்த கிலானியின் பிரிவினைவாத தலைவர் கிலானியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த வீட்டுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 2000ம் ஆண்டு வரை கிலானி இந்த வீட்டில் தான் வசித்து வந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.