பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள பிடிப்புத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அரசாணை 115,139 மற்றும் 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 21 மாத ஊதியமாற்று நிலுவைத் தொகை உடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவின் அடிப்படையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
newstm.in