ஆந்திரா முதல்வர் பிரிவினைவாதி.?- பிரபல பாடகரின் கருத்தால் சர்ச்சை.!

திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படும் இந்த விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது.

இதில், மோஷன் பிக்சர் பிரிவில் சிறந்த பாடலாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதாக கோல்டன் குளோப் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்., பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

இந்தநிலையில் நாட்டு நாட்டுபாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வாழ்த்தினார். இது குறித்து முதல்வர் ஜெகன் தனது சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அதில் “தெலுங்குக் கொடி உயரப் பறக்கிறது! அனைத்து ஆந்திரப் பிரதேசம் சார்பாக ஒட்டுமொத்த படக்குழுவை நான் வாழ்த்துகிறேன். உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்!.” என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஆந்திர முதல்வரின் வாழ்த்துச் செய்தி பிரபல பாடகர் அட்னான் ஷமிக்கு பிடிக்கவில்லை, முதலில் “நாம் இந்தியர்கள்” என்றும், “பிரிவினைவாத அணுகுமுறை” ஆரோக்கியமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது.? போலீஸ் அளித்த டீயை குடிக்க மறுத்த அகிலேஷ்.!

முதலமைச்சரின் ட்வீட்டுக்கு பதிலளித்த அட்னான் ஷமி, “தெலுங்குக் கொடியா? இந்தியக் கொடி என்பது சரியா? நாம் இந்தியர்கள் தான், எனவே நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து உங்களைப் பிரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள். குறிப்பாக சர்வதேச அளவில் நாம் ஒரே நாடு!. இந்த பிரிவினைவாத மனப்பான்மை 1947ல் பார்த்தது போல் ஆரோக்கியமற்றது!!! நன்றி. ஜெய் ஹிந்த்.” என அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.