இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு..!

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த உடலை மீட்ட சிறப்பு பிரிவு போலீசார், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதும், டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள தலைவர்களை குறிவைத்து சதித்திட்டமிட்டதும் தெரிய வந்தது.

பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 8 பேர் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருவர் கைதான நிலையில், மேலும் 4 பேரை தேடி வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.