உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நிச்சியிக்கப்பட்ட 25 வயது இளம்பெண்ணுடன் பாஜக மாவட்ட செயலாளர் காணாமல் போனது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் ஹர்தோய் மாவட்ட பா.ஜ.க. செயலாளராக இருப்பவர் ஆஷிஸ் சுக்லா . இவருக்கு திருமணமாகி 21 வயதில் ஒரு மகனும், 7வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதிக் கட்சி பிரமுகரின் 25 வயது மகளுடன், ஆஷிஸ் சுக்லாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, தங்கள் தொடர்பை வலுப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சமாஜ்வாதிக் கட்சி பிரமுகர் தனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார். இதையறிந்த, பா.ஜ.க.வின் ஆஷிஸ் சுக்லா, 25 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடியுள்ளார்.
மகளைக் காணவில்லை என பல இடங்களில் தேடிய நிலையில் சமாஜ்வாதிக் கட்சி பிரமுகருக்கு ஆஷ்ஸ் சுக்லாவுடன் தனது மகளுக்கு தொடர்பு இருந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து, தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக ஆஷிஸ் சுக்லா மீது சமாஜ்வாதிக் கட்சிப் பிரமுகர் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, பா.ஜ.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆஷிஸ் சுக்லா விடுவிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். சுக்லாவுக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சுக்லாவின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in