டெல்லி: ஒன்றிய அரசு துறைகளில் 71,000 பேருக்கு காணொலியில் பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கப்பட்டுள்ள ரோஜ்கார் மேளா மூலம் பணிநியமன ஆணையை வழங்கினார். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
