கோவை தொண்டாமுத்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 24.7 ஏக்கர் நிலம் மீட்பு..!!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 24.7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் தேவராயபுரத்தில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நிலத்தை மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.