வரிபாக்கி… நடிகை ஐஷ்வர்யா ராய்க்கு நோட்டீஸ்!!

நில வரி செலுத்தவில்லை எனக்கூறி நடிகை ஐஷ்வர்யா ராய்க்கு மகாராஷ்டிரா வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் தங்கோன் கிராமத்தில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக ஐஸ்வர்யா ராய் நில வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட சின்னார் தாலுகா தாசில்தார், ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் வரி முழுவதையும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும், வரித்தொகையான 21,960 ரூபாயை செலுத்தாவிட்டால் நிலவருவாய் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் அங்கு நில வரி செலுத்தாதோர் 1,200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் பாலிவுட் திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.

நோட்டீஸ் கிடைக்கப்பெறாமல் அல்லது கவனிக்காமல் ஐஷ்வர்யா ராய் வரி செலுத்தாமல் இருந்திருப்பார் என்றும், 22 ஆயிரம் ரூபாய் அவருக்கு ஒரு பணமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.