அதிமுக உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளரை அறிவிப்போம். பாஜக போட்டியிட்டால் ஆதரவு வழங்குவோம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள்
அதிமுகவின் விதிகளின்படிதான் கட்சி நடக்க வேண்டும் என்பது தான் இன்றைய தர்மயுத்தம். இரட்டை இலை சின்னம் முடங்கிப் போக காரணமாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். பழனிசாமி அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.”என்று கூறினார்.