குடியரசு தின விழா விடுமுறை நாளையொட்டி தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஜனவரி 25ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
அதன் பின்னர் ஜனவரி 29ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு பயணச்சீட்டை இன்று காலை 8 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.