சென்னை புத்தக கண்காட்சி நிறைவு.. ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை.!

சென்னை 46வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் எண்ணத்திலும், நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் நோக்கத்திலும் தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புத்தக கண்காட்சியின் மூலம் பொதுமக்களும் புத்தகப் பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். மேலும் எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை புத்தக கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு 46வது புத்தக கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி  முதல் இன்று  (ஜனவரி 22ம் தேதி)  மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த  46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த புத்தகத் திருவிழாவிற்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் உலக அளவில் இருந்து உள்ளூர் புத்தகங்களும் இடம்பெற்றது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும், சென்னை 46வது புத்தக கண்காட்சியில் சுமார் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.