ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்னும் 2 நாட்களில் முடிவு… பாஜக மாஸ்டர் பிளான்!

பாஜக சார்பில் ஈரோட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் மாநில செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் பாஜக மாநில செயற்குழு

இதற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை தோற்கடிப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து திமுக ஆதரவு வேட்பாளர்களை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பாக ஈரோட்டில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? இல்லை அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கும்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார். ஒருவேளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால்,

அதிமுகவில் பிளவு

அவர்கள் செய்யும் ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் கொள்ளைக்கும் அங்கீகாரத்தை தேடி கொள்வார்கள். எனவே இதை மனதில் வைத்து ஈரோடு மக்கள் செயல்பட வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பது எங்கள் கருத்து.

பாஜக அப்படி செய்யாது

ஏனெனில் திமுகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து வியூகம் அமைக்க வேண்டியது அவசியம். அதேசமயம் அதிமுகவின் இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது. அடுத்த கட்சியின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆளும் திமுகவை வரும் இடைத்தேர்தலில் தோற்கடிக்க அனைத்து வியூகங்களையும் கையிலெடுப்போம். தற்போதைய சூழலில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் இருக்கின்றனர்.

திமுக அரசின் ஊழல்

பாஜக முன்னிலையில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே ஓபிஎஸ் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். திமுகவை அழிக்க நினைக்கும் அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுடன் சேரலாம்.

நாங்கள் போட்டியிட்டால் திமுக அரசின் ஊழலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிப்போம். திமுக கூட்டணி கட்சியை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும் என்று கே.பி.ராமலிங்கம் கூறினார். இதன்மூலம் ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக போட்டியிடும் திட்டம் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.