அரக்கோணம் அருகே கோயில் விழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து… பலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கோயில் விழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்தது.

இதில் கிரேனுக்கு அடியில் சிக்கியவர்கள் புன்னை மற்றும் அரக்கோணம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இன்று காலை பலியானார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.