ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி; ஓபிஎஸ் அறிவிப்பு.!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்க உள்ளார்.

மகன் சஞ்சய்க்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் சீட் கேட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம், அவருக்கே வாய்ப்பு வழங்கி உள்ளது. இதே போல், அதிமுகவும் ஈரோடு கிக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளது. அக்கட்சிக்கு ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என
ஓபிஎஸ்
தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது என ஓபிஎஸ் அணி முடிவெடுத்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, ‘‘ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. ஓரிரு நாட்களில் வேட்பாளை அறிவிப்பு வெளியிடப்படும். துணை ஒருங்கிணைப்பாளராக நானும், இனை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமியும் கழக சட்ட விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்.

நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது; எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது.

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை, தனித்தன்மையை பிரதமர் பறைசாற்றிவருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடி தலைமையில் தேசிய கட்சி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி. அந்தவகையில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஒரு உறைகல்லாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கும் என்பதால், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என கூறினோம்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.