சென்னை: குடியரசு தினத்தன்று சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விருது பெறுவோர் பெயரை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு. சிறந்த சமூக சேவைக்கான விருதுக்கு விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு கழக செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு கோயம்புத்தூர் ‘சிறுதுளி’ அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். ஜன. 26-ம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை ஆளுநர் ரவி வழங்க உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.