தமிழகத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கிரேன் விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் முயற்சி செய்த போதே விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
#BREAKING | அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமம் மண்டியம்மன் கோயில் திருவிழாவில்
கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம் pic.twitter.com/ucyKYAYQmm
— DON Updates (@DonUpdates_in) January 22, 2023
பலி எண்ணிக்கை உயர்வு
மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த பேரப்பேரி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஆபரேட்டரை கைது செய்துள்ளனர்.