சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2022 ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கான வருடத்தின் ரி20 ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் ரி20 ஆண்கள் அணியில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று மகளிர் ரி20 அணிக்கு இலங்கை வீராங்கனை இனோக்க ரணவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வருடத்தின் ரி20 ஆண்கள் அணியின் தலைவராக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வீரர்கள் மூவரும் இந்த அணிக்காக பெயரிடப்பட்டுள்ளனர். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பண்டியா ஆகியோர் ஆவர்.