கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் ஒன்றிய கவுன்சிலர், மகனுடன் காரில் கடத்தல்..!

கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடாவில் அ.தி.மு.க. பெண் ஒன்றிய கவுன்சிலர், மகனுடன் காரில் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய்கிழமையன்று வீட்டில் இருந்த ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டின் முன் நின்ற இன்னோவா காரும் காணாமல் போன நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, அதன் ஹார்ட் டிஸ்க்கும் மாயமாகியுள்ளது.

இது குறித்து ஒன்றிய கவுன்சிலரின் கணவர் அளித்த புகார் தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

ரோஜா மற்றும் அவரது மகனின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தப்பட்ட கார் ஆரம்பாக்கம் வழியாக ஆந்திரா நோக்கி சென்றதால், போலீசார் ஆந்திரா சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.