இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (24) நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 385 ஓட்டங்கள் பெற்றது. அணித் தலைவர் ரோகித் சர்மா 101 ஓட்டங்களையும் இ ஷுப்மன் கில் 112 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதையடுத்து 386 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்றதால், மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.