பத்ம விருதுகள் அறிவிப்பு; 106 பேர் தேர்வு.!

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்காக பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் ஓ.ஆர்.எஸ்.கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரிய மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம வுபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு… கமலும், திமுக ‘பி’ டீமும்- ஜெயக்குமார் சுளீர்

சமாஜ்வாடி கட்சியின் மறைந்த தலைவர் முலாயம் சிங் யாதவ், பொது விவகாரத் துறையில் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். ஜாஹிர் ஹுசைன் கலைத் துறையில் பத்ம விபூஷன் பெற்றார். கேஎம் பிர்லா வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்காக பத்ம பூஷன் பெற்றார். அதேபோல் சுதா மூர்த்தி சமூகப் பணிக்காக பத்ம பூஷன் பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.