முத்திரையிடப்படாத நிறுவைக் கருவிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக ……

கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் உள்ள நிறுவை அளவு கருவிகளுக்கு முத்திரை பதிக்கும் பணி நேற்று (25) அந்த  மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள அளவீட்டு அலகுகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

வருடந்தோறும் தராசுகள் மற்றும் அளவை பொருட்களுக்கு முத்திரையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு வருட காலப்பகுதியில் முத்திரையிடாத கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வர்த்தகர்களின் தராசுகளுக்கு முத்திரையிடப்பட்டது.

முத்திரையிடப்படாத நிறுவை அளவு கருவிகளை பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு எதிராக 1995ம் ஆண்டின் 35ஆம் இலக்க அளவீட்டு அலகுகள் , நியமங்கள் சேவைகள் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.