சொத்துத்தகராறில் தம்பியை கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணன் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சொத்துத்தகராறில் தம்பியை, கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்த நிலையில், தான் கொலை செய்தது குறித்து அவர் சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரிடம் விளக்கி கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்மாடசாமி- முத்துராஜ் சகோதரர்கள். இருவருக்குமிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு எதிர் வீட்டில் உள்ள தனது அண்ணன் பொன்மாடசாமியின் வீட்டிற்கு, அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் போதையில் சென்ற முத்துராஜ், அண்ணி முத்துமாரியிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முத்துமாரி செல்போன் வாயிலாக அளித்த தகவலின் படி, பொன்மாடசாமி கட்டையுடன் சென்று, நள்ளிரவில் தெருவில் நின்றிருந்த முத்துராஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொன்மாடசாமி தனது தம்பியின் தலையில் பலமாக கட்டையால் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார், கீழ ஈரல் பகுதியில் பதுங்கியிருந்த பொன்மாடசாமியை இன்று அதிகாலை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.