போராடி வெற்றி பெற்ற இந்திய அணி!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரன் அடிக்க தடுமாறியது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமா சான்ட்னர் 19 ரன்கள் எடுத்தார். மொத்தமாக நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாண்டியா, சஹல், சுந்தர், ஹூடா, குல்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கில், இஷான் கிஷன் ஆகியோர் முறையே 11, 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ராகுல் த்ரிபாட்டி 13 ரன்கள் எடுத்து பவிலியன் திரும்பினார். வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். 100 ரன்கள் எடுக்கவே இந்திய அணி போராட வேண்டி இருந்தது. ஆனால் ஒருபக்கம் சூர்யகுமார் யாதவ் நின்று விளையாடினார். அவருடன் கை கோர்த்த பாண்டியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து ஒரு பந்து மீதம் இருக்கும் போது இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டி போல் விளையாடி இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து டி20 தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.