முகலாய தோட்டத்தை அம்ரித் உதயான் என்ற புதிய பெயருடன் இன்று திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகலாய தோட்டத்தை அம்ரித் உதயான் எனப் பெயரிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ இன்று திறந்து வைக்கிறார்.

மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், மையப் புல்வெளித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட திறந்திருக்கும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் முகலாய தோட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்க்கட்சியினர் அரசை விமர்சித்துள்ளனர்.

வரலாற்றின் அடிமைத்தளைகளில் இருந்து விடுபட பெயர் மாற்றம் அவசியம் என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.