விமானத்தில் அரை நிர்வாணமாக ரகளை: இத்தாலி பெண் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, இத்தாலியைச் சேர்ந்த 45 வயது பெண் கைது செய்யப்பட்டார்.

எகானமி வகுப்பு டிக்கெட் வைத்திருந்த பாவ்லா பெரூசியோ, கூடுதல் வசதி கொண்ட வணிக வகுப்பில் உட்காரச்சென்றபோது, அவரை தடுத்த விமான பணியாளரை தாக்கியதோடு, மற்றொருவர் மீது துப்பியதாகவும், மேலும், தனது ஆடையைக் களைந்து அரை நிர்வாணமாக ரகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.

விமானம் பறந்துக் கொண்டு இருக்கும் போதே பாவ்லா பெரூசியோ இவ்வாறு நடந்துக் கொண்டது குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.