தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை – திரிகோணமலையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.