#BREAKING : கனமழை காரணமாக.. தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று அதிகாலை முதல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.