சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரியை திருடி சென்ற நபர் கைது..!

திண்டிவனம் அருகே, சுங்கச்சாவடி தடுப்பை உடைத்துக்கொண்டு திருட்டு லாரியை ஓட்டி வந்த நபரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

லாரி ஓட்டுநர் ஒருவர், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஜி.எஸ்.டி சாலையோரம் தனது லாரியை நிறுத்திவிட்டு உணவருந்த சென்றுள்ளார்.

லாரியை திருடிய மர்ம நபர், அதனை திண்டிவனம் நோக்கி ஓட்டிச்சென்றார்.

ஆத்தூர் சுங்கச்சாவடி தடுப்பை உடைத்துக்கொண்டு லாரியை ஓட்டிசெல்வதை கவனித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அந்த நபரை திண்டிவனம் வரை விரட்டிச்சென்று பிடித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.