மக்களே இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்.. உங்களுக்கான எச்சரிக்கை பதிவு..!!

நமது உடல் சுற்று சூழலுக்கு தகுந்தாற் போல் வேலை செய்யும். அதாவது வெளிச்சமாக இருக்கும் நேரங்களில், சுறுசுறுப்பாக இயங்கவும், இருட்டான இடங்களில் தூங்குவதற்கு தகுந்த மாதிரி இயற்கை வடிவமைத்து உள்ளது. அதனால் தான் இரவில் தூங்கி பகலில் வேலை செய்ய உடல் பழக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் வேலை செய்து உடல் அசதியாக இருக்கும். அதனால் இரவில் தூங்கி அடுத்த நாள் காலை எழுவது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவவும்.

ஆனால் இரவில் விளக்குகளை அனைத்து விட்டு நீண்ட நேரம் வேலை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது, மூளைக்கு இன்னும் இருட்டாக வில்லை, வெளிச்சமாக இருக்கிறது , நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சிக்னலை அனுப்புகிறது. அதனால் மூளை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கும். ஆனால் அடுத்த நாள் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் நாம் மூளையை நீண்ட நேரம் ஏமாற்றி வெளிச்சமாக வைத்து தூங்காமல் வைத்து இருப்பது தான் காரணம்

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்திய செல்போன்களுக்கு இன்று சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். இதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக செல்போன் அதிக நேரம் பயன்படுத்தினாலும், இருட்டில் பயன்படுத்துவதாலும் கண் பார்வை பறிபோய்விடும் என எச்சரித்துள்ளனர். அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் தனது வீட்டில் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இழந்த பார்வையை திரும்பவும் மீட்டெடுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.