தமிழக மீனவர்கள் மீது கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் பாலாறு வனப்பகுதி உள்ளது. இங்கு காவிரியும் பாலாறும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சிலர் தப்பித்த நிலையில், கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை என்ற நபரை காணவில்லை. துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் தேடி வருகின்றனர்.
பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே கர்நாடகா வனத்துறையினர் பாலாற்றில் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான சூழல் நிலவி வருவதால் பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனை சாவடிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
newstm.in