சென்னை: வார இறுதி நாட்களில் சென்னை – தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாண்டிபஜார், போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்ட தியாகராயா சாலையில் வார இறுதி நாட்கள் காலை 6 மணிமுதல் 9 மணி வரை வரும் பிப்.19, பிப்.26, மார்ச் 3, மார்ச் 12, மார்ச் 19 ஆகிய நாட்களில் நடைபெறுவதால் தியாகராயா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
பிரகாசம் சாலை வழியாக தியாகராய சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, வாணி மஹால், நாயார் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வழியாக எல்டாம்ஸ் ரோடு மற்றும் அண்ணா சாலை சென்று இலக்கை அடையலாம்.
அண்ணா சாலை மற்றும் எல்டாம்ஸ் ரோடு வழியாக ம.பொ.சி. சந்திப்பு வழியாக வடபழனி செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் தணிகாசலம் ரோடு வழியாக செல்லலாம் இதில் எந்த மாற்றமும் இல்லை.