ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கைகளை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடனும் பலத்த மின்னலுடனும் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Red Warning For 6 Districts

அந்த மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.