சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸுக்கு எங்கே இடம்? சபாநாயகர் அப்பாவு சென்ன பதில்!

சட்டமன்ற இருக்கையில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சட்டபேரவை தலைவரின் முழு உரிமை என கூறிய நிலையில் அதனை சட்டப்பேரவையில் பார்க்கலாம் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். தனது ஆசிரியர் பணியையும் நினைவு கூர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “சட்டமன்றத்தில் இருக்கையில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சட்டப்பேரவை தலைவரின் முழு உரிமை. அது குறித்து அந்த நேரத்தில் சட்ட சபையில் பார்த்துக் கொள்ளலாம்” என தெரிவித்தார்,

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் 2023 ஆண்டுக்குள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும், அந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் இருக்கைகளை ஒதுக்குவது சபாநாயகர் உரிமை என அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.