15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த 60 வயது ஆண்., பாகிஸ்தானில் பகீர் சம்பவம்


பாகிஸ்தானில் 15 வயது மைனர் சிறுமி கடத்தப்பட்டு 60 வயது நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பிரித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதும் குற்றம்சாட்டப்பட்ட நபர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பதும் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய பத்திரிகையான Bitter Winter அறிக்கையின்படி, டிசம்பர் 15 அன்று சிதாரா ஆரிஃப் (Sitara Arif) என்ற பெண் கடத்தப்பட்டார். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க பாகிஸ்தான் காவல்துறையை வற்புறுத்த இரண்டு மாதங்கள் ஆனது.

15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த 60 வயது ஆண்., பாகிஸ்தானில் பகீர் சம்பவம் | 60 Old Man Forcibly Marries 15 Old Girl PakistanRepresentative Image AP

சிறுமியின் தந்தை, ஆரிஃப் கில் (Arif Gill), உடல் ஊனமுற்ற நபர், பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள ஒரு பொதுப் பள்ளியின் இஸ்லாமிய முதல்வரான நைலா அம்ப்ரீனின் (Naila Ambreen) வீட்டு உதவியாளராக சிதாராவை பணிபுரிய அனுமதித்தார்.

அம்ப்ரீனின் 60 வயதான கணவரான ராணா தய்யாப் (Rana Tayyab), சிதாராவை தனது இரண்டாவது மனைவியாக எடுத்துக்கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அவர் டிசம்பர் 15 அன்று வேலை முடிந்து வீடு திரும்பவில்லை, பின்னர் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி ராணா தய்யாப்பை திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.

பொலிஸ் விசாரணையில், ராணா தய்யாப் சித்தாராவை தனது இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டதாக நிக்காஹ் அல்லது இஸ்லாமிய திருமண சான்றிதழ் பொலிஸாரிடம் காட்டப்பட்டது.

ஆனால் தற்போது பாகிஸ்தானில் மைனர் பெண்ணை திருமணம் செய்வது சட்டவிரோதமாகும்.

பாகிஸ்தானில், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பல சிறுமிகள் இத்தகைய கட்டாயத் திருமணம் மற்றும் மத மாற்றத்திற்கு பலியாகின்றனர்.

பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 1.6 விழுக்காட்டினரே கிறிஸ்தவ சமூகம் மற்றும் இனவெறி மற்றும் மத சகிப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களாக உள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.