சினிமாவில் 13 ஆண்டுகள்: சமந்தாவின் நன்றிப் பதிவு

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழில் 'மாஸ்கோவின் காவேரி' படத்தில்தான் கதாநாயகியாக நடிக்க முதன் முதலில் தேர்வானார். ஆனால், அந்தப் படம் வெளிவர கொஞ்சம் தாமதமானது.

அதற்கு முன்பாக பிப்ரவரி 26, 2010ம் ஆண்டு அவர் கதாநாயகியாக நடித்த 'ஏ மாய சேசவே' தெலுங்குப் படம் முதலில் வெளியானது. அப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் சமந்தா கதாநாயகியாக நடித்து முதலில் வெளிவந்த படம் 'பாணா காத்தாடி'.

தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் 'கத்தி' படம்தான் அவருக்கு கதாநாயகியாக முதலில் பெரிய வெற்றியைக் கொடுத்தது. தொடர்ந்து 'தெறி, மெர்சல், இரும்புத் திரை, காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். தமிழில் புதிய படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இன்றுடன் திரையுலகில் தனது 13 வருடங்களை நிறைவு செய்வது குறித்து, அவரது ரசிகர்கள் டிரென்டிங் செய்ததை ரீடுவீட் செய்து “இந்த அன்பை நான் உணர்கிறேன். அதுதான் என்னைத் தொடர வைக்கிறது. இப்போதும், என்றும் நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால்தான்…13 ஆண்டுகள்…ஆனால், இப்போதுதான் ஆரம்பிக்கிறோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.