சென்னை: மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சிறுதானியங்களால் ஆன சிற்றுண்டி வழங்க உத்தரவு அளித்துள்ளனர். சிறுதானியங்களில் தயாரித்த லட்டு, மிக்சர், கொழுக்கொட்டை, பிஸ்கட், சீடை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளனர். அனைத்து மின்வாரிய அலுவலர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
