மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்த தண்டபாணி (56) மற்றும் அவரது மகன் காளிதாஸ் (29) ஆகிய இருவரும் அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்படுவது வழக்கம் என தெரிகிறது.
இந்நிலையில் மது போதையில் தந்தை, மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தண்டபாணி இரும்பு கம்பியை எடுத்து மகன் காளிதாசை தாக்க வந்துள்ளார்.
அப்போது காளிதாஸ் அதே கம்பியை பிடுங்கி அவரது தந்தையின் பின் மண்டையில் அடித்துள்ளார். இதில் தண்டபாணி மயங்கி கீழே விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் காளிதாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in