இந்திய நீதித்துறை, ஜனநாயகம் பிரச்னையில் இருப்பதாக ராகுல் காந்தி பொய் குற்றச்சாட்டு: கிரண் ரிஜ்ஜூ

இந்திய நீதித்துறையும், ஜனநாயகமும் பிரச்சினையில் இருப்பதாக வெளியுலகுக்கு ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ புகார் தெரிவித்துள்ளார்.

ஓடிசா மாநிலம் புவனேசுவரத்தில் பேசிய அவர், இந்திய நீதித்துறையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதும், நீதிபதிகளின் அறிவுத்திறனை பொது ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்பதுமே உண்மைநிலை என்றும் கூறினார். 

இந்தியாவின் புகழைக் கெடுக்கும் நோக்கில்,  நாட்டின் ஜனநாயகம் குறித்து வதந்திகளைப் பரப்பும் நோக்கில் எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்ற கிரண் ரிஜ்ஜூ, நாடு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.