இந்திய கடற்படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை கடல்பகுதியில் துருவ் ரக ஹெலிகாப்டர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது ஹெலிகாப்டரின் என்ஜினில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரிலிருந்த 3 பேர் கடலோர காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.