Viduthalai: “அவருக்கு பல ஹீரோ இருக்காங்க; எனக்கு ஒரு வெற்றிமாறன்தான் இருக்காரு" – நடிகர் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள `விடுதலை’ திரைப்படம். இந்த மாதம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, இப்படத்தில் கதைநாயகனாக யதார்த்தமான போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகர் சூரி, விடுதலை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

விடுதலை| நடிகர் சூரி

“ஒரு காமெடியனாக நிறைய மேடையேறி இருக்கேன். முதல் முறையாக ஒரு கதைநாயகனாக இந்த மேடை எனக்குக் கிடைத்திருக்கிறது. எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் இப்படத்தில் ஐயாவின் இசையில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வெற்றிமாறன் அண்ணனுக்கு நான் மட்டுமல்ல என் குடும்பமே சேர்ந்து நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் சக நடிகர்களை, டெக்னீசியன்களை வாழ்த்தி தன்னைவிட அதிகமாக வளர்த்துவிடுபவர் மாமா விஜய்சேதுபதி. இப்படி யாரையும் நான் பார்த்ததில்லை.

படத்தின் காட்சிகளைப் பார்த்துட்டு என்னை வாழ்த்திப் பாராட்டினார். சினிமாவில் வாய்ப்பு தேடும் போதிலிருந்து நானும் விஜய் சேதுபதியும் நெருக்கமான நண்பர்கள். அப்போது ஒரு நல்ல காமெடி நடிகனாக வரவேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பேன். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதி மாமா என்னிடம் ‘நீ காமெடி நடிகன் என்று நீயாக முடிவு செய்யாதே. நீ ஒரு நல்ல நடிகன்’ என்றார். எப்போதும் அதைச் சொல்லிக் கொண்டே இருப்பார். விடுதலை படத்தில் நான் நடிகனாக நடிக்கும்போது படப்படிப்பில் வெற்றி சாரிடம் நான் சொல்ல வேண்டிய நன்றியை எனக்குப் பதிலாக சொன்னார்” என்றார்.

விடுதலை

இப்படத்திற்குப் பிறகு நான் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன் என்று பலர் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நகைச்சுவை நடிகன் என்றாலும் கதாநாயகன் என்றாலும் நடிப்பேன். நான் எப்போதும் ஒரு நடிகனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.